60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மார்ச் 1 முதல் விநியோகம்!!

0

தற்போது நாட்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் மார்ச் மாதத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் பாதித்து வருகிறது. தற்போது அனைத்து உலக நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அதற்காக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் இதனை மக்கள் இரண்டு முறை போடவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி – வைரலாகும் விலை பட்டியல்!!

மேலும் 45 வயதை கடந்தவர்களில் உடல் நலம் குன்றியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும் என்னும் அறிவிப்பை தொடர்ந்து , அங்கு போடப்படும் தடுப்பூசிக்கு பணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தடுப்பூசி விலை குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிக்கை வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here