மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திலும் தடையில்லாமல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் மே மாதம் 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் புதிதாக பதவியேற்றிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவம் – தமிழக அரசுக்கு கோரிக்கை!!
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருவதால் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதை தடுப்பதற்கு நாளை (மே 10) முதல் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும். ஸ்டான்லி மருத்துவமனையை பொறுத்த அளவிற்கு கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த முழு முடக்க காலத்திலும் மக்களுக்கு தடை இல்லாமல் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயாராகும்’ என தெரிவித்துள்ளார்.