போக்கு காட்டும் கொரோனா.. மீண்டும் கேரளாவில் அமல்படுத்தப்பட்ட மும்மடங்கு ஊரடங்கு!!!

0
கேரளாவில் கொரோனா பரவல் தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளதால் அம்மாநில அரசு தொற்று குறையாத 175 உள்ளாட்சி அமைப்புகளில் மும்மடங்கு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஓரளவுக்கு கொரோன இரண்டாம் அலையால் ஏற்பட்ட தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 14,000 மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.
மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. இதனால் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. மேலும் தொற்று சதவீதம் 15 விழுக்காடுக்கும் அதிகமாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மும்மடங்கு ஊரடங்கு உத்தரவை கேரள அரசு விதித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here