கொரோனா நோய் தொற்றால் உலகமே அதிர்ந்து போய்யுள்ளது, இந்த நோயால் அதிக உயிர் பலிகள் மற்றும் பொருளாதர வீழ்ச்சி என பலவற்றை கடந்த 2020 முதல் கண்டு வருகிறோம். கொரோனா பரவலை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா 2 வது அலையின்போது நோய் பரவலை நன்று திறமையாக கையாண்டதில் தமிழகம் முதலிடம் என தனியார் அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனாவை கையாண்ட விதத்தில் தமிழகம் முதலிடம்…
கொரோனா தொற்றின் பரவல் கடந்த ஆண்டு 2020 முதல் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இதனால் பல உயிர்சேதங்கள் ஏற்பட்டன, இந்த பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகளை அரசு பெற்றுக்கொண்டது. இந்தியாவில் முதல் அலையின் பரவல் முடிந்து இப்பொழுது இரண்டாம் ஆலை பரவி வருகிறது, இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் இரண்டாம் ஆலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடியது. தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,
இந்நிலையில் தனியார் அமைப்பான லோக்கல் சர்க்கிள் அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தியது, அதில் கொரோனா நோய் பரவலை எந்த மாநில மிக சிறப்பாகவும் சரியாக கையாண்டது என்ற ஆய்வை நடத்தியது. அதில் தமிழகம் தான் சிறப்பான மருத்துவம் உரிய மருத்துவ தேவைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் ஏற்பாடு செய்தது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆய்வில் தமிழகம் தான் 59% பெற்று முதலிடம் பெற்றுள்ளது என்று லோக்கல் சர்க்கிள் அமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலம் 54% பெற்று இரண்டாம் இடத்தையும் 51% உத்தரப் பிரதேசம் மாநிலமும், 47% மகாராஷ்டிரம் மாநிலமும் பெற்றதாக தெரிவித்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்