வேகமெடுக்கும் கொரோனா மூன்றாவது அலை – சிக்கிக்கொண்ட முக்கிய நாடு!!

0

நாடு முழுவதும் பரவும் கொரோனா இரண்டாம் அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது பிரிட்டனில் மூன்றாம் அலை உருவாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை :

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். சீனாவில் துவங்கிய கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகில் பல கோடி மக்கள் இறந்துள்ளனர்.

இந்நிலையில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என பரவி வந்த கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவும் என வல்லுநர்களால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் முன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது பிரிட்டன் நாட்டில் கொரோனா மூன்றாம் அலையின் முதல் கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 வெறியன்ட் பிரிட்டனில் வேகமாக பரவ துவங்கியுள்ளது. நோய்த்தொற்றின் பரவலை தடுக்க எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஜூன் 21 ம் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இருந்த பிரிட்டன் அரசு என்ன செய்யும் என உலக நாடுகள் அனைத்தும் கவனித்துக்கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here