தனியார் நிறுவனங்களில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு!!

0
corona

சென்னையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அதிவேகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை

மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளி என்பதை சுத்தமாக மறந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இதன் விளைவாக தான் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு மக்கள் கடைபிடித்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தும் மக்கள் சிறிதும் கொரோனா அச்சமின்றி அதனை பின்பற்றாமல் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சென்னையில் தான் இது அதிகமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை விரைந்துள்ளனர். இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்னையில் இயங்கி வரும் ஓர் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் மூன்று கிளைகளில் பணி புரியும் ஊழியர்களில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

corona test

இப்படி பண்ணா எங்கிருந்து கொரோனா குறையும்?? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

இந்த நிறுவனத்தின் கிளைகள் தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. தற்போது இந்த மூன்று இடத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அந்த நிறுவன கிளைகளில் பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here