சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து 700 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா உறுதி:
சென்னை ஐஐடியில் கொரோனா நோய் தொற்று காரணமாக 183 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு உள்ள 9 மாணவர்கள் விடுதிகள் மற்றும் 1 விருந்தினர் மாளிகை ஆகியவை மூடப்பட்டன. மீண்டும் ஐஐடியை தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நோய் தொற்று அறிகுறி இருந்ததால் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பரிசோதனை செய்யப்பட்ட 6 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் மாணவர்கள் நலன் கருதி கல்லுரிகளில் மருத்துவ முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவித்தார். மேலும் நோய் பரவல் குறையும் இந்த காலகட்டத்தில் இப்படி அதிகமானோர் பதிக்கப்படுவது இயல்புதான் என தெரிவித்தார்