தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்களை கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பள்ளி மாணவர்களிடம் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை மக்களை தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு எச்சரித்து வருகின்றனர். மேலும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு தக்க அபராததையும் விதித்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா, பள்ளி மாணவர்களை தாக்கி வருகிறது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என கடந்த சில நாட்களில் மட்டுமே பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.
கிரிக்கெட் வீரர் பாப் வுல்மரின் மர்மமான மரணம் – இன்று நினைவு தினம்!!
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அந்த பள்ளியில் 6 மாணவிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.