கொடி ஏறும் போது கொரோனா இறங்க வேண்டும் – தமிழிசை ஆளுநர் மாளிகையில் ஆலோசனை!!!

0
கோடி ஏறும் போது கொரோனா இறங்க வேண்டும் - தமிழிசை ஆளுநர் மாளிகையில் ஆலோசனை!!!
கோடி ஏறும் போது கொரோனா இறங்க வேண்டும் - தமிழிசை ஆளுநர் மாளிகையில் ஆலோசனை!!!

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. 3வது அலையின் பரவல் ஆரம்பமாகும் நிலை உள்ளது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுக்க வேண்டும். இந்த கொரோனா பரவலை பற்றி சீராய்வு கூட்டம் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிகாரிகளுடன் பேசினார்.

ஆளுநர் மாளிகையில் தமிழிசை ஆலோசனை…

கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகளவில் புதுச்சேரியில் பரவி வருகிறது. அம்மாநில அரசு பல நடவடிக்கை விதிமுறை கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருந்தாலும் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் புதுச்சேரியின் துணை ஆளுநர் தமிழிசை கொரோனா தொற்று பற்றிய சீராய்வு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடத்தினார். அதில் 3 ஆம் அலையின் தாக்கம் ஆரம்பமாக உள்ளது எனவே அதற்கான முன் எச்சரிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்துமாறு தெரிவித்தார். அதன் பின் கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்படுகிறது பொருளாதார பாதிப்புகள் எதுவும் ஏற்பட விட கூடாது என்பதற்காக என்பதை நினியாவில் கொள்ளுங்கள்.

ஆளுநர் மாளிகையில் தமிழிசை ஆலோசனை...
ஆளுநர் மாளிகையில் தமிழிசை ஆலோசனை…

கொரோனா மீது உள்ள பயமும் பரவலும் எப்பொழுதும் மக்கள் மனதில் நினைத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அதிகம் பரவி வருகிறது எனவே பெற்றோர்கள் அதிகம் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்ல வேண்டாம். வெளியே விளையாட ணைமதிக்க வேண்டாம் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மிக வேதனையளிக்கிறது என்றும் கூறினார். எனவே வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொடியேற்றும் போது கொரோனா தொற்றின் பரவல் இறங்கியிருக்க வேண்டும் என்று கூறினார். கொரோனா பரவலை தடுக்க மேலும் நடவடிக்கைகளை பாதுகாப்புகளை அதிகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here