இன்றைய கொரோனா நிலவரம் – ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!

0
இந்தியாவில் மெல்ல மெல்ல உயரும் பலி எண்ணிக்கை - பாதிப்பு நிலவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் ஒரே நாளில் 30,941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் நேற்று மட்டும் 350 பேர் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி இறந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டாம் அலையின் முடிவில் குறைய தொடங்கிய கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கட்டுக்கடங்காத வகையில் கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது.

இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!
இன்றைய கொரோனா நிலவரம் – ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!

இவ்வாறு கேரளாவில் அதிகரித்த கொரோனா தொற்றுக்கு முக்கிய காரணம் ஓணம் பண்டிகையால் விடப்பட்ட விடுமுறை என்று கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு தேவையான வழிகாட்டுதல்களை கேரளாவிற்கும், மஹாராஷ்ட்ராவிற்கும் வழங்கியுள்ளது. மேலும் அந்ததந்த மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!
இன்றைய கொரோனா நிலவரம் – ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!

மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, புதிதாக 30,941 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 350 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,560 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் தொற்றில் இருந்து 36,275 பேர் மீண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here