இந்தியாவில் தலை தூக்கும் மூன்றாம் அலை? – ஒரே நாளில் 369 பேர் இறப்பு!!

0

இந்தியாவில் ஒரே நாளில் 37, 875 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழந்தோர் எண்ணிக்கை 369 ஆக பதிவாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மிக தீவிரமாக பதிவாகி வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

 

ஆனால் இதுவே தொற்று பாதிப்புக்கு அதிகரிக்க காரணமாகியுள்ளது. அதாவது மீண்டும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட 40,000 ஐ நெருங்கி பதிவாகி வருகிறது. இது நிபுணர்கள் சொன்னது போல இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகி விட்டதா? என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,30,96,718 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 369 ஆக உள்ளது. இதனால் தற்போது வரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4,41,411 அதிகரித்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில்  39,114 பேர் குணமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here