இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவின் பிடியில் இருந்து 43,903 பேர் மீட்பு – சுகாதார அமைச்சகம் தகவல்!!

0

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,903 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் 38,948 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 219 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 93 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.  பின்னர் படிப்படியாக இந்த பாதிப்புகள் குறைந்தது. பின்னர் சென்ற பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் வெகுவாக குறைந்து இருந்தது. இந்நிலையில் தான் இரண்டாம் அலை இந்தியாவில் தலை தூக்கியது. குறிப்பாக மே மாதத்தில் இந்த இரண்டாம் அலையால் நோய் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டாம் அலை பரவல் குறைந்தது. தற்போது மீண்டும் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட கடந்த 24 மணி நேர விவரங்களின்படி, 38,948 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 219 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 43,903 பேர் இத்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் தற்போது வரை இந்நோயில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,21,81,995 ஆக அதிகரித்துள்ளது. 68,75,41,762 பேருக்கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here