இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா.. ஒரே நாளில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு!!

0

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 460 பேர் இந்நோய்த்தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா முதல் அலையின் பொழுது உலக நாடுகளின் கைவசம் தடுப்பூசி இல்லாததால் பெரும் அளவில் உயிர் இழப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா.. ஒரே நாளில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு!!
இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா.. ஒரே நாளில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு!!

பின்னர் உருமாறிய டெல்டா வைரசால் இரண்டாம் அலை ஏற்பட்டது. இந்த இரண்டாம் அலையின் அனைத்து நாடுகளின் கைவசம் தடுப்பூசி இருந்ததால் விரைவிலேயே இந்த தொற்று முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் மூன்றாம் அலை பற்றி எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் மீண்டும் இந்தியாவில் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா.. ஒரே நாளில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு!!
இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா.. ஒரே நாளில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு!!

இந்நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி புதிதாக 41, 965 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,28,10,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 460 பேர் இறந்துள்ளனர். மேலும் நேற்று மட்டும் இத்தொற்றில் இருந்து 33,964 பேர் குணமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here