தேர்தலின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டு முதல் தவணை 2000 வழங்கபட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணைக்கான டோக்கன் மாதிரி தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
நிவாரண நிதி:
தேர்தலின் போது தி.மு.க.கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. தேர்தலின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், தற்போது அதன் முதல் தவணையான ரூபாய் 2000 முழு ஊரடங்கு காரணமாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது கொரோனா நிவாரண நிதிக்கான இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நிவாரண நிதிக்கான இரண்டாம் தவணை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பிற்கான டோக்கன் மாதிரி தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.