குடியரசு தினவிழாவை ஒட்டி நடைபெற உள்ள அணிவகுப்பு ஒத்திகைக்கு வந்த 150 இராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வருடந்தோறும் ஜனவரி 26ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முப்படையை சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பும், சாகசங்களும் நடைபெறும். இதில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வர். கடற்படை, விமானப்படை, மற்றும் இராணுவத்தை சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வர். இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்புப் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
‘ரஜினி விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்’ – முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு!!
இந்நிலையில் ராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகைக்காக பலநூறு ராணுவ வீர்ரகள் டெல்லிக்கு வந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 150 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் பரிசோதனைக்கு பின் தகுந்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.