அபாயகரமான கொரோனா வகை என கருதப்படும் C1.2 மற்றும் Mu வைரஸ் இந்தியாவில் இல்லாததால் மக்கள் அச்சப்பட தேவையில்லை தேசிய நோய்க் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, இந்தோனேசியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் புதிய அலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. முக்கியமாக டெல்டா வகை கொரோனா காரணமாக தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இரண்டாம் அலை முடிவில் குறைந்த தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்குமோ? என்றும் மக்கள் அஞ்சி வருகின்றனர். மேலும் இந்த அலை குழந்தைகளை அதிகம் தாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்தனர். அதே சமயம் மிக ஆபத்தான கொரோனவாக கருதப்படும் C1.2 மற்றும் Mu போன்ற வைரஸ்களும் உலகின் பிற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது மக்களின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒரு புதிய கொரோனா வகையால் மட்டுமே மூன்றாவது அலை வர காரணமாக இருக்க முடியாது எனவும் 6 மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும் என தேசிய நோய்க் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் C1.2 மற்றும் Mu போன்ற அபாயகரமான கொரோனா வகை இந்தியாவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்