தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!!

0
இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. குறிப்பாக மே மாதத்தில் கொரோனா மூன்றாம் அலையினால்  தமிழகத்தில்  பாதிப்புகள் உச்சத்தை தொட்டது.
பின்னர் மே மாதம் தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை பிறப்பித்து தற்போது தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகிறது. ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி செப்டம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர் தொற்று எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் தமிழக அரசும் ஊரடங்கில் தளர்வுகளை குறைத்து வருகிறது.
இந்நிலையில் உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய் பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மருத்துவ உட்கட்டமைப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here