தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா:

உலகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வருகிறது.தமிழ்நாட்டிலும் எல்லா மாவட்டங்களிலும் இத்தொற்று பரவி வரும் நிலையில் தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.இதற்கு காரணம் அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றியதால் மட்டுமே சாத்தியம் ஆனது.ஆனால் மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்படுமா என்று மக்கள் திகைத்துள்ளனர். இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறியதாவது,தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் மருத்துவமனையில் புதிதாக படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தயாராக இருக்கிறது.

மேலும் தமிழகத்தில் 40% மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது வரை இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 5% மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here