கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகரித்த கொரோனா தொற்று ஊரடங்கு மற்றும் தடுப்பூசியின் பயனால் ஜூன் மாத இறுதியில் குறைய தொடங்கியது. இருப்பினும் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால் சில மாநிலங்களில் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு கொரோனா தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவும் ஒன்று. அம்மாநிலத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது இந்திய அளவில் பதிவான கொரோனா தொற்றின் விகிதத்தில் 42% என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு இன்றி பக்ரீத் பண்டிகைக்காக கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி அதாவது சனி, ஞாயிற்றுகிழமைகளான வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கேரளாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்