இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,909 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இதில் 34,763 பேர் குணமடைந்துள்ளதாகவும் , மேலும் 380 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல்:
உலகம் முழுவதும் கொரோனா என்னும் பெருந்தொற்று நோயானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் தோற்றால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக தடுப்பு மருந்தை அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பு மருந்தானது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி மருந்தானது செலுத்தப்பட்டு வருகின்ற இந்நிலையில் தற்போது இந்த பெருந்தொற்றானது உருமாறி டெல்டா கொரோனவாக மாறியுள்ளது. இதன் தீவிரமும் அதிகமாக உள்ளது.
தற்போது மத்திய சுகாதார துறையானது பாதிப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியாவில் 63,43,81,358 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 4.38 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் இதனால் பாதிப்படைந்தோரின் எண்ணைக்கையானது 3.26 கோடியை தாண்டியது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,909 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் புதிதாக 380 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரே நாளில் 34,763 பேர் குணமடைந்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்