இந்தியாவில் ஒரேநாளில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறைந்த கொரோனா :
கடந்த சில மாதங்களாக கொரோனா 2ம் அலை வேகமெடுத்த நிலையில் தற்போது எடுத்த கணக்கு எடுப்பின் படி சனிக்கிழமை 4.01 லட்சம், ஞாயிறு அன்று 4.03 லட்சமாக இருந்த பாதிப்பு நேற்று 3.66 லட்சமாக குறைந்தது. இப்படியாக இருக்க கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3, 29, 942 ஆக குறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,29,92,517ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது. அதோடு இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 3,876 பேர் உயிரிழந்தனர்.