இந்தியாவில் கொரோனவால் ஒரே நாளில் 271 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

0

இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு சுமார் 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக வேகம் எடுத்த கொரோனா சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்து வந்தது. மேலும் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்தியாவில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றிய தகவல் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 56,211 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனவால் 271 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,62,114 பேர் உயிரை இழந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதே போல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 37,028 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,93,021 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 5,40,720 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சமடைந்த வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here