தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!

0

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொந்த ஊர் செல்லும் மக்கள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படாத காரணத்தினால் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீவிரமாகும் கொரோனா தடுப்பு நடவடிக்கை – புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்!!

முழு ஊரடங்கு நேரத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் நேர கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் சிறிய ஊர்களில் இருந்து வந்து பணிபுரிந்து வரும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அவர்கள் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தயாராகி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு வசதியாக கூடுதல் சிறப்பு பேருந்துகளையும், இன்று மற்றும் நாளை 24 மணி நேர பேருந்து சேவை இருக்கும் போன்ற ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here