கொரோனாவால் தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் நாளில் 3 பேர் தான் பாதிப்பு !!! – சுகாதாரத்துறை பாராட்டு

0

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த வேளையில் மும்பையில் உள்ள தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று:

கொரோனா தொற்று நாடு முழுவதும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் அலையை விட இந்த இரண்டாவது அலையின் வீரியம் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தடுக்க மாநில அரசுகள் பலவும் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்திய பின்பு தான் ஓரளவிற்கு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் இந்த ஊரடங்கை தொடர்ந்தால் சாமானிய மக்களின் நிலை கேள்விக்குறி தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பரவல் அதிகமாக பரவி வந்தது. அதுவும் மும்பையில் உள்ள தாராவில் சொல்லவே வேண்டாம். அதிகளவு நெருக்கமாகவும், கலீஜான ஏரியாகவே இருக்கும். அதில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது எடுத்த கணக்கெடுப்பின் படி மும்பை தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது அலை கொரோனாவில் நாடு பாதிக்கப்ட்டுள்ள நிலையில் இந்த செய்தி பாராட்டிற்குரிய விஷயமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here