தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் புதிதாக 33,075 பேருக்கு தொற்று உறுதி!!

0
குறைந்தது கொரோனாவின் பரவல் - சந்தோஷத்தில் மக்கள்!!!
குறைந்தது கொரோனாவின் பரவல் - சந்தோஷத்தில் மக்கள்!!!

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 33,075 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயரும் கொரோனா பரவல் :

கொரோனா பரவலில் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் தற்போது மகாராஷ்டிரா,கர்நாடக,கேரளாவை தொடர்ந்து தமிழகமும் அதிக பாதிப்பு எண்ணிக்கைகளை கொண்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 33,075 புதிய கொரோனா நோயாளிகள், 20,486 நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் ,மேலும் 335 பேர் கொரோனாவுக்கு பலி ஆகியுள்ளனர்.

குறைந்தது கொரோனாவின் பரவல்:q
qகுறைந்தது கொரோனாவின் பரவல்:

இவ்வாறு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,31,291,உடல் நலம் சரி ஆகி சென்றவர்களின் எண்ணிக்கை 13,81,690,மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 18,005 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பேரிடர் காலத்தை தாண்டுவது சாத்தியமற்றது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here