கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – 141 பேரில் 51 பேருக்கு கொரோனா உறுதி!!

0
கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 141 பேரில் 51 பேருக்கு கொரோனா உறுதி!!
கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 141 பேரில் 51 பேருக்கு கொரோனா உறுதி!!

கடந்த சில தினங்களாகவே கிராம பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சோதனை மேற்கொண்டபோது 141 பேரில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடு முழுவதும் சுமார் 15 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல தரப்பினர் கொரோனா வைரஸ் காரணமாக தங்களது வேலையை இழந்துள்ளனர். மேலும் சிலர் தங்களது அன்றாட உணவிற்கு கூட பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.அந்த அளவிற்கு மக்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று:
கொரோனா தொற்று:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்தியாவில் சில வாரங்களாகவே கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கிராமப்புறங்களில் வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.தற்போது அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள குர்கியால் என்னும் கிராம பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு 141 பேருக்கு பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அந்த கிராமம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா அறிகுறி அதிகமாக காணப்பட்டு வரும் கிராமங்களில் கடந்த 11ம் தேதி பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here