அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை மே மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு உச்சத்தை தொட்டது. இதனால் முழு ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசும் தொற்றின் பரவலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை குறைந்தது.
மேலும் ஒவ்வொரு வாரமும் முதல்வரும் நிபுணர்களுடன் ஆலோசித்து, ஏராளமான தளர்வுகள் கொடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக திறக்கப்படாத பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதே சமயம் மூன்றாம் அலை பற்றி எச்சரிக்கையும் வந்துகொண்டே தான் இருந்தது.
தற்போது மீண்டும் மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்