கொரோனாவின் இரண்டாவது அலை செலுத்தும் ஆதிக்கம் – இந்தியாவில் ஒரே நாளில் 4,01,078 பேர் பாதிப்பு!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது மேலும் 4,01,078 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் சுமார் 15 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு புதிய உச்சமாக 4 லட்சத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் மிக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,078 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,18,92,676 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி 4,187 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,18,609 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஊரடங்கு ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,79,30,960 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்றிற்கு உள்ளாகி மருத்துவனையில் 37,23,446 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் 1.09% ஆகவும், சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 17.01% ஆகவும் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 81.98% ஆகவும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here