இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 1,619 பேர் பலி!!

0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் நிலையில் தற்போது புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் மேலும் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான தாக்கத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனவால் 1,619 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,44,178 குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆக அதிகரித்துள்ளது.

‘உங்க அழகான முகத்த இப்படி ஆக்கிட்டாங்களே, ரைசா’ – வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 19,29,329 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 1,28,013 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் தடுப்பூசி பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் நாட்டில் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here