இந்தியாவில் உயரும் குணமடைவோர் எண்ணிக்கை …! – பாதிப்பு 3 கோடியை தாண்டியது !!!

0

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த அலையின் தாக்கத்தால் பல உயிர்கள் பறிபோகியுள்ளன. இந்நிலையில் இந்த பரவல் மெதுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை  இந்தியாவில் தொற்று பாதிப்பு 3 கோடியை கடந்து உள்ளது மற்றும் தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கையும் உயர்த்து உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை ஆட்கொண்டு பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை, வாழ்வாதாரம் போன்ற அனைத்தும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் அந்த பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்த தொற்று பரவல் குறித்து தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டி உள்ளது.

அதாவது, இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பாதிப்பு 3,00,28,709 என உயர்ந்து உள்ளது. அதை போல் ஒரு நாள் இறப்பு 1,358-ஆக பதிவாகி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,660-ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய் தொற்றிலிருந்து 68,817பேர் குணமடைந்து உள்ளனர். இதன் வாயிலாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,94,855-ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் அதிகமானோர் பாதிப்பிலிருந்து குணமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here