கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தற்போது வரை இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலக மக்களை அச்சுறுத்தி பல்கி பெருகும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது . இந்நிலையில் பூஸ்டர் டோஸ் பற்றிய சந்தேகங்களும் கேள்விகளும் மக்களிடம் எழுந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசிபோட்ட பின்னர் தான் ‘பூஸ்டர் டோஸ்’ பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் இருபது விழுக்காடு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டு விட்டதாகவும் 62 விழுக்காடு மக்களுக்கு ஒரு டோஸ் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா பூஸ்டர் டோஸ் பற்றிய விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதாவது கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும்போது அவர் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், “2 டோஸ்கள் போடுவதே தொடர் முன்னுரிமையாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார். இதனால் தற்போது வரை மத்திய அரசிடம் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்