தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் 50 பேருக்கு கொரோனா!!

0

கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாரத் பயோடெக் நிறுவனத்தில் 50 பேருக்கு கொரோனா:

முதல் அலையை தொடந்து தீவிரமாக பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது கொரோனா இரண்டாம் அலை. இதன் அதீத பரவலின் மத்திய மற்றும் மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் விகிதம் சற்று குறைந்துள்ளது என கூறி வந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அறிகுறிகளை கண்டதும் பரிசோதனை மேற்கொள்வது வரவேற்க தகுந்தது எனவும், மக்களின் ஒத்துழைப்பு இன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது எனவும் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்,

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது கோவேக்சின் முன்றாம் கட்ட நடவடிக்கை மேற்கொள்கின்ற நேரத்தில் அங்கு பணிபுரியும் 50 பேருக்கு தோற்று ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here