தமிழகத்தில் சில நாட்களாக குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நேற்று மாலை அரசு வெளியிட்ட நிலவரப்படி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்த கொரோனா பாதிப்பால் தமிழக அரசு, மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை பிறப்பித்தது. ஏப்ரல், மே மாதத்தில் உச்சத்தை தொட்ட தொற்று எண்ணிக்கை பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் கொரோனா மூன்றாம் அலையை பற்றிய பயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போதய நிலவரப்படி தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் குறைந்திருந்த தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை தரவுகளின்படி, தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் 113 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்