கொரோனா நோயாளியை சுட்டுக் கொன்ற வடகொரியா..! சந்தேகம் எழுந்ததால் நடவடிக்கை..!

0

வடகொரியாவில் சீனாவில் இருந்து வந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..!

சீனாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை அங்கு 60,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறன்றன. இதுவரை உலகில் 24க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

கிம் ஜோங் உன் ஆட்சி..!

வடகொரியாவில் கிம் ஜோங் உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டிற்கு சீனா சென்று திரும்பிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.

ஆனால் அவர் விதிகளை மீறி பொது குளியறையை பயன்படுத்தியதால் அச்சமடைந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் மற்றவருக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அவரை சுட்டுக் கொன்று விட்டனர் என தகவல் வெளிவந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here