மாணவர்களின் பெற்றோர்களை குறிவைக்கும் கொரோனா?? பள்ளிகள் திறப்பு சரியான முடிவு தானா??

0

கடந்த சில நாட்களாக தமிழக்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பள்ளி மாணவர்களிடம் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா:

கொரோனா தொற்று இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் உயர்கல்வி வகுப்பிற்கான பள்ளிகளில் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை மற்றும் காவலர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பள்ளி மாணவர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அரசு உதவி பெற்று இயங்கி வரும் பள்ளியில் ஒரு ஆசிரியை மற்றும் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்பு அந்த பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளின் பெற்றோருக்கு கொரோனா தொற்று எற்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 4 மாணவிகளின் பெற்றோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பள்ளி மாணவ மாணவிகள் மூலம் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி – ஏப்ரலுக்கு பிறகு பள்ளிகள் இயங்குமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!

இதுகுறித்து தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எதுவும் எடுப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் மே மாதத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது, இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவுவது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சமடைந்த வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here