ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா!!

0

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக காணப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 1,68,912 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.35 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,68,912 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,70,179 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை – வெற்றி யாருக்கு??

மேலும் நேற்று ஒரே நாளில் 75.086 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் 12,01,009 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பூசி பணிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here