இந்தியாவில் மேலும் 2,34,692 பேருக்கு கொரோனா- 1,341 பேர் பலி!!

0

இந்தியாவில் தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,341 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

உலக அளவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனவால் 2,34,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,341 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த வெற்றிக்கு ரெடியா பல்டான்ஸ் – மும்பை, ஐதராபாத் அணிகள் பல பரீட்சை!!

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,23,354 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,09,997 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது அதிக அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here