இந்தியாவில் மேலும் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை திடுக் தகவல்!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு நாட்டில் தற்போது கொரோனாவின் வேகம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,82,315 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 2,06,65,148 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 3,780 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் நாட்டில் இன்று 21,000 ஐ தாண்டியது கொரோனா தொற்று !!!

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 3,38,439 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 81.91% ஆகவும் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.10% ஆகவும் உள்ளது. தொற்றுக்கு உள்ளாகி தற்போது மருத்துவமனையில் 34,87,229 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here