இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,023 பேர் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாட்டில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி வளர்கிறது. அதேபோல் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எணிக்கையும் ஆயிர கணக்கில் இருந்து வருகிறது. இதனால் நாட்டில் மக்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 2,023 பேர் பலியாகியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்று 2,95,041 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்தமாக 1,56,16,130 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இதன் மூலம் நாட்டில் மொத்தமாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மொத்தம் 21,57,538 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு சுமார் 3 லட்சத்தை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் ஆச்சி அடைந்து வருகின்றனர்.