நாட்டில் மக்கள் அனைவரையும் அதிவேகமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றினால் 3,79,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் பரவல்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் நாட்டில் 3,79,257 பேரிடையே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் தொற்றினால் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,04,832 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 2,69,507 பேர் குணமடைந்துள்ளனர்.
மே 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி!!
இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 30,84,814 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோய்பரவல் அசுர வேகத்தில் இருந்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.