கொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் – ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பகிர் தகவல்!!

0

கொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது கொரோனா மூன்றாம் அலை பற்றிய பேச்சுக்கள் தான் எழுந்து வருகிறது. இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளே முழுதாக குறையாத நிலையில் மூன்றாம் அலை உலக மக்களை தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது.

அதற்கேற்றாற் போல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கொரோனா மூன்றாம் அலை எப்பொழுது உருவாகும் போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி இந்த மாதமே கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் வரும் அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தை தொடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அலை தொடங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here