கொடிய பெருந்தொற்றான கொரோனாவின் மூன்றாம் அலையே வந்தாலும் குழந்தைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் அலை:
உலகை பாடாய் படுத்திவரும் கொரோனாவின் இரண்டு அலைகள் வந்து முடிந்து விட்டது. இந்த இரண்டு அலைகளின் பொழுதும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் ஏராளம். ஆனால் நிபுணர்கள் கொரோனா மூன்றாம் அலை வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தெரிவித்தனர். இது பெற்றோர்கள் மத்தியில் பயத்தை உண்டு செய்தது.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் மூன்றாம் அலை வந்தாலும், அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும் மக்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவை கொரோனா தொற்றின் வீரியத்தை குறைக்கும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்