மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையின் தொடக்கமா? என்று அம்மாநில மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. அந்த அளவுக்கு நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அங்கு அதிகம். கடைசியாக மஹாராஷ்டிராவில் ஜூன் 16 ஆம் தேதி 10,107 ஆக தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியது.
பின்னர் அங்கு பாதிப்பு எண்ணிக்கை அன்றாடம் 10,000 க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. ஆனால் தற்போது மஹாராஷ்டிராவில் குறிப்பிட்ட 11 நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரசால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் கொரோனா மூன்றாம் அலை இன்னும் சில வாரங்களில் மஹாராஷ்டிராவில் தொடங்கும் என்று எச்சரித்தனர். அவர்கள் சொன்னது போலவே தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை குறைக்கும் எண்ணிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்