சென்னையில் கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் War Room உருவாக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் பால சுப்பிரமணியம் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார் ரூமில் செயல்பட தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் முதல் அலை முடிந்து ஏற்பட்ட இரண்டாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதும் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை தொட்டது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இரண்டாம் அலை பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது.
இந்நிலையில் இரண்டாம் அலை பரவல் முழுதாக ஓய்வதற்குள் மூன்றாம் அலை தலை தூக்கியுள்ளது. இந்த மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது சென்னையில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்க, துணை ஆணையர் தலைமையில் வார் ரூம் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வார் ரூம் என்ற கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கியுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார்ரூமில் தற்போது செயல்படத் துவங்கியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்