கொரோனா 2-வது அலை ஜூலை வரை செல்லுமா !!! – வைராலஜிஸ்ட் தகவல்
பிரபல வைராலஜிஸ்ட்டும், ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிரி அறிவியல்கள் நிறுவனத்தின் இயக்குனருமான ஷாகித் ஜமீல் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா 2-வது அலை ஜூலை வரையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்நிலையில் பிரபல வைராலஜிஸ்ட் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது கொரோனா 2வது அலை எடுத்த எடுப்பிலேயே லட்சக்கணக்கில் எண்ணிக்கையை தொட்டு வருகிறது. அதே போல் இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் நாளொன்றுக்கு 4 லட்சம் வரை எட்டியுள்ளது. இது மீண்டும் உச்சம் தொட்டு குறைய தொடங்க ஜூலை வரை ஆகும் என்று குறிப்புட்டார்.
மேலும் அவர் கூறியதாவது, கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிக மோசமாக உள்ளது. கொரோனா முதல் அலையில் தொற்று சீராக குறைய தொடங்கியது. ஆனால் 2 வது அலையில் இவ்வாறு குறைய நீண்ட நாள் எடுக்கும் , வளைவு தட்டையாகி இருக்கலாம், எனவே ஜூலை வரை இந்த 2வது அலை செல்லும் எனவும் கூறியுள்ளார். 2 வது அலை இவ்வளவு மோசமாவதற்கு தேர்தல் கூட்டங்களும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளும் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.