இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று – 4,120 பேர் பலி!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பு குறித்த முழு விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் தற்போது நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவு படுத்தபட்டு வருகிறது. இருந்தும் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் மொத்தம் 2,37,03,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றினால் 4,120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,58,317 ஆக உயர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆக்சிசனை தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை – கோவையில் ஏற்பட்டிருக்கும் அவல நிலை!!

இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 3,52,181 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் 37,10,525 பேர் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here