இந்தியாவில் கொரோனா பரவல்: புதிதாக 31,222 பேர் பாதிப்பு – ஒரே நாளில் 42,942 பேர் டிஸ்சார்ஜ்!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 290 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா நிலவரம்:

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கோவிட் 19 வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி உள்ளது. பல லட்சம் உயிர்களை பறித்த இந்த கொடிய தொற்று நோய்க்கு தற்போது வரை தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வாக இருந்து வருகிறது.

இந்தியாவின் முதல் அலையின் போது இருந்த தாக்கத்தை விட இரண்டாம் அலையான டெல்டா வைரஸ் பரவலின் போது பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஏனெனில், இந்த வைரஸ் முதல் அலையின் போது இருந்ததை விட உருமாற்றம் அடைந்து வீரியம் மிக்கதாக மாறி விட்டதென அறிவியலார்கள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக  31,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.  இதோடு சேர்த்து, புதிதாக 290 பேர் இறந்துள்ளனர்.  இது மட்டுமல்லாமல், நாட்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் 42942 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் நாட்டில் மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 97.44% ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் மொத்தம் 69,90,62,776 பேர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here