வருகின்ற ஆறு மாதங்களுக்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வர உள்ளதாகவும், நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் நோய்தடுப்பாற்றலை பெற்று விட்டதாகவும் தேசிய நோய்த் தடுப்புத்துறை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விடிவுகாலம்:
உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பல மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள தொற்று பரவலுக்கான ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே இருந்து வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் இந்த வைரஸின் மூன்றாம் பரவலுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களிடம் அறிவுறுத்தி வருகிறது. மேலும், பல மாநிலங்களில் மூன்றாம் பரவல் ஆரம்பித்துவிட்டதாக அண்மையில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதில், தற்போது ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேசிய நோய்த் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத் சிங் இந்த நோய்பரவல் குறித்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, இன்னும் ஆறே மாதங்களில் கொரோனா தொற்று முடிவுக்கு வர உள்ளதாகவும், மேலும் இது சாதாரண தொற்று நோய்களில் ஒன்று போல ஆகி மக்களுடன் ஒன்றாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் 70 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும், மக்களில் 50 கோடி பேருக்கு நோய் தடுப்பாற்றல் ஏற்பட்டு விட்டதாகவும் அறிவித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்