அடுத்தடுத்து ஒரே பள்ளியை சேர்ந்த மூன்று மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட பள்ளியை மூடி கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளி:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டது. முழுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மாநிலத்தில் பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தற்போது புதிதாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வந்தவாசி என்ற இடத்தை சார்ந்த குணக்கம் பூண்டி என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அடுத்தடுத்து மூன்று மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும், ஆசிரியருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்ட பின் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்