குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கொரோனா தொற்றினால் அவதிப்படும் மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார். அதற்கான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு கமெண்ட் செய்த தனது ரசிகருக்கு தர்ஷா குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.
தர்ஷா குப்தா:
சின்னத்திரையில் முள்ளும் மலரும் என்னும் சீரியல் மூலம் அவதாரம் எடுத்த தர்ஷா குப்தா தற்போது விஜய் டிவியில் செந்தூர பூவே என்னும் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்காததால் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரீச் கிடைத்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தரப்பு மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனை கண்ட தர்ஷா குப்தா தன்னால் இயன்ற உதவியை புரிந்து வருகிறார்.
மேலும் அதற்கான புகைப்படத்தையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர் ஒருவர் நீங்க செய்வது நல்ல விஷயம் தான் ஆனால் அதை ஏன் போட்டோ போட்டு பப்ளிசிட்டி பண்றீங்க என்று கேட்டார். தற்போது அதற்கு பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா, என்னை போல் என் ரசிகர்களும் உதவி செய்வார்கள். அவர்களை ஊக்குவிக்க தான் புகைப்படத்தை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.